திருநெல்வேலி
கூர்நோக்கு இல்லத்திலிருந்து 10 சிறுவர்கள் மாயம்
பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களில் 10 பேர் செவ்வாய்க்கிழமை இரவு மாயமாகினர்.
பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களில் 10 பேர் செவ்வாய்க்கிழமை இரவு மாயமாகினர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் 32 பேர், போலீஸாரால் கைது செய்யப்பட்டு, இங்குள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10 சிறுவர்கள் இங்கிருந்து மாயமாகியுள்ளனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து, மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர்.