தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் பணிச்சுமை காரணமாக செவிலியர் மணிமாலா உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பணிவரன்முறை செய்வதோடு, பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாநில அமைப்புச் செயலர் நிகிலா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் நாகசரஸ்வதி, நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.