மாநகராட்சி சார்பில் பிப்.18-இல் சுவர் ஓவியப் போட்டி

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை காந்திமதி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுவர் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை காந்திமதி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுவர் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உத்தரவின்படி, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயணன் நாயர் அறிவுறுத்தலின்படி இந்தப் போட்டி நடைபெறுகிறது. "தூய்மை இந்தியா இயக்கம்' என்னும் தலைப்பில் காலை 8 மணி பகல் 12 மணி வரை சுவர் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் 16-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
t‌v‌l​c‌o‌r‌p‌h‌e​a‌l‌t‌h@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற இணையதள முகவரியிலோ அல்லது 8526767488, 9003753437 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com