மானூர் அருகே கோயில் சிலைகளைச் சேதப்படுத்தியது தொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மானூர் அருகேயுள்ள நாஞ்சான்குளத்தில் மாசான கரையாண்டி சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள முப்பிடாதியம்மன் உள்ளிட்ட மண் சிலைகளையும், பேச்சியம்மன், மாசான கரையாண்டி, சுடலைமாட சுவாமி உள்ளிட்ட கல் சிலைகளையும், கடந்த சில நாள்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தினராம். இதுகுறித்து கோயில் நிர்வாகி பால்சாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த வசந்தம் (31) என்பவரை கைது செய்தனர். இவ் வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.