குற்றாலம் கல்லூரியில் 17,18 இல் மாவட்ட  அளவிலான செஸ் போட்டி

திருநெல்வேலி மாவட்ட சதுரங்க முன்னேற்ற கழகம் சார்பில்,  பிப்.17, 18 ஆகிய இரு தினங்கள் மாவட்ட சதுரங்க வீரர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி குற்றாலத்தில் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட சதுரங்க முன்னேற்ற கழகம் சார்பில்,  பிப்.17, 18 ஆகிய இரு தினங்கள் மாவட்ட சதுரங்க வீரர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி குற்றாலத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேக் சலீம் வெளியிட்ட அறிக்கை:
2018ம் ஆண்டிற்கான மாவட்ட சதுரங்க வீரர்களை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் வரும் 17மற்றும் 18ஆகியஇருதினங்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் 7,9,11,13,15,17,25 வயதுக்குள்பட்டோர் பிரிவுகளில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் போட்டிகள் நடைபெறுகிறது.  இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறும் செஸ் வீரர்கள் மாநில சதுரங்க கழகம் நடத்தும்2018ஆம் ஆண்டுக்கான மாநில சதுரங்க வீரர்கள் போட்டிகளில் திருநெல்வேலி மாவட்டம் சார்பில் கலந்துகொள்வர். ஏற்பாடுகளை தலைவர் சத்தியமூர்த்தி, செயலர் ராமசந்திரன், உபதலைவர் பெருமாள், கருணாகரன்,  உப செயலர் சங்கரகிருஷ்ணன்,ஆலோசகர் சுந்தர்ராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com