தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டியில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று பதக்கங்கள் பெற்றனர்.
என்ட்ரென்ச் எலக்ட்ரானிக்ஸ், ஐ.ஐ.டி. நிறுவனம் சார்பில் என் விஷன் எனும் பெயரில் நடைபெற்ற தேசிய அளவிலான இப்போட்டியில் 2 குழுக்களாக இப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல், 2 ஆவது இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை, முதலிடம் பெற்றவருக்கு ரூ. 7500 , 2 ஆம் இடம்பெற்றவருக்கு ரூ. 2500 பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னையில் இந்தியா ஸ்டெம் பவுன்டேசன் நடத்திய 6 முதல் 9 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான இப்போட்டியில் 4 ஆம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற்று கோப்பை, பதக்கம் வென்றனர்.
இம் மாணவர்களை பள்ளித் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி ஐயப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.