திருநெல்வேலி நகரத்தில் உள்ள அரசு முதல் நிலை நூலகத்தில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
வ.உ.சி. வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில் தாமிர சபை நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன் தலைமை வகித்தார். ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் ஜெயபாலன் வரவேற்றார். கல்லூரி மாணவிகள் மேகலவள்ளி, அருணாவர்ஷினி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வட்டாட்சியர் ஆறுமுகம், கவிஞர் சக்தி வேலாயுதம், நூலகர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நூலக ஊழியர்கள் கந்தசாமி, சகாயம், அவ்வை ஆகியோர் செய்திருந்தனர்.