வீரகேரளம்புதூர் அருகே குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீரகேரளம்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யவேந்தன் தலைமையிலான போலீஸார் அதிசயபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, புதுக்குளத்தில் ஜேசிபி மூலம் டிராக்டரில் சிலர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீஸாரை கண்டதும் ஜேசிபி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
பிடிபட்டோரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அச்சங்குன்றத்தைச் சேர்ந்த கோ. ராஜசேகரன்(34), மு. மகேந்திரன் (22), மா. ராமசாமி (34) என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது. அவர்களை போலீஸார் வழக்குப் பதிந்து, கைதுசெய்து, ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்தனர். ஜேசிபி ஓட்டுநர் ரவியை (24) தேடி வருகின்றனர்.