திருநெல்வேலியில் சமத்துவப் பொங்கல் விழா பல்வேறு அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், வட்டாட்சியர் கணேசன் உள்பட பலர்கலந்துகொண்டனர். பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தங்கராஜ் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. துணை வட்டாட்சியர்கள் சுப்பு, சுமதி, விஜி, பாபு, ஆவுடைநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொக்கிரகுளத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சிக்கு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகரன் தலைமை வகித்தார். அஞ்சல் அலுவலர் மைக்கேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அருள்பணி அந்தோணிகுரூஸ் தலைமை வகித்தார். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திருநெல்வேலி கிளைத் தலைவர் சார்லி, அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை நிர்வாகி மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இல்லக் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.