பாளை.யில் ஜன. 20இல் தொழிலாளர் நல வாரிய  உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டையில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இம்மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

பாளையங்கோட்டையில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இம்மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் (பொ) பு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வாரியத்தில் பதிவு பெறாத கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர், தெரு வியாபாரிகள், தையல், வீட்டுப்பணி உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்து கொள்ள ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன்ப,டி பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இம்மாதம் 20 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது. மேற்படி வாரியங்களில் பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு கோரும் விண்ணப்பத்துடன் இரண்டு புகைப்படம், சான்றொப்பமிட்ட ஆவணங்களான குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com