விவேகானந்தர் மன்றக் கூட்டம்

விவேகானந்தர் மன்றத்தின் 166 ஆவது கூட்டம் பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விவேகானந்தர் மன்றத்தின் 166 ஆவது கூட்டம் பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பா.வளன்அரசு தலைமை வகித்தார். பாஷ்யம் இறைவணக்கம் பாடினார். மன்றச் செயலர் சுந்தரம் வரவேற்றார். "விவேக ஆனந்தம்' என்ற தலைப்பில் சோ.ராசுவும், "அன்பால் ஏமாறக் கூடாத நிலை' என்ற தலைப்பில் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். விவேகானந்தரின் சிறப்புகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. சுந்தரம், நெல்லையப்பன், முத்துசாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கோதைமாறன், வெள்ளைத்துரை, நல்லாசிரியர் வை.ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். மன்ற இணைச் செயலர் முருகன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com