பொதிகைத் தமிழ்ச் சங்க ஆலோசனைக் கூட்டம்

பாளையங்கோட்டையில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் கவிஞர் பே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நா. உஷாதேவி, டாக்டர் அய்யனார், அனிதா, கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்டு 50 ஆவது ஆண்டு பொன்விழாவை மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது.
பொதிகைத் தமிழ்ச் சங்கம், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பொருநை இலக்கிய வட்டம், கம்பன் இலக்கியச் சங்கம், மாவட்ட திருக்குறள் தகவல் மையம், தமிழ் முழக்கப் பேரவை, தாமிரவருணி இலக்கிய மன்றம் போன்ற தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பிப். 3 முதல் 11 ஆம் தேதி வரை திருநெல்வேலியில் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என அறிவித்த ஆட்சியருக்கு நன்றி தெரிவிப்பது, நிகழாண்டும் கவிதை நூலுக்கான போட்டி நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com