மின்சாரம் பாய்ந்து இளம்பெண் சாவு

திருநெல்வேலியில் தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் சனிக்கிழமை இறந்தார்.

திருநெல்வேலியில் தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் சனிக்கிழமை இறந்தார்.
திருநெல்வேலி சி.என். கிராமத்தைச் சேர்ந்தவர் வைரபிரகாஷ் (36). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (33). காலையில் வழக்கம்போல், வீட்டுக்குத் தேவையான தண்ணீரை சேமித்து வைப்பதற்காக மின் மோட்டாரை இயக்கினாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சந்தியா மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு வழியில் இறந்தார். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை ந டத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com