திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் மூன்று நாள்கள் குடும்ப விழா நடைபெற்றது.
குற்றாலம்-செங்கோட்டை சாலையில் உள்ள காசிமேஜர்புரத்தில் நடைபெற்ற இவ்விழாவில், புதுக்கோட்டை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் செ.ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவருமான வைரமுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவை சிறப்பாக நடத்தியதற்காக தாய்கோ வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் குற்றாலம் சேகர், செங்கோட்டை நகர செயலர் கிருஷ்ணமுரளி ஆகியோருக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.