திருநெல்வேலியில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் கோஆப்டெக்ஸ் சார்பில் கைத்தறி துணிகள் விற்பனை முகாம் நடைபெற்றது.
கோஆப்டெக்ஸ் சார்பில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் எனும் திட்டத்தின் கீழ் கைத்தறி துணிகள் விற்பனை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மகளிர் தினத்தையொட்டி கல்லூரியில் திருநெல்வேலி காந்திமதி கோஆப்டெக்ஸ் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு விற்பனை முகாமிற்கு பேராசிரியை சொர்ணலதா ஜோசப் தலைமை வகித்தார். இதில், கோஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் எம். சண்முகசுந்தரம், விற்பனை மேலாளர் பி. கனகசபாபதி, பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.