திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 16) ஐந்து இடங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி வட்டம் மேலவீரராகவபுரம், ராதாபுரம் வட்டம் செட்டிகுளம், அம்பாசமுத்திரம் வட்டம் வாகைக்குளம், நான்குனேரி வட்டம் புலியூர்குறிச்சி, பாளையங்கோட்டை வட்டம் ரெட்டியார்பட்டி வெங்கழுநீர் சமுத்திரம் ஆகிய கிராமங்களில் இம்முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம்.