திருநெல்வேலி நகரத்தில் தனியார் அரிசி மொத்த விற்பனை கடையில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி நகரம் மேலமாடவீதியில் நெல், அரிசி மொத்த வியாபாரம் செய்யும் கடை உள்ளது. இந்தக் கடையில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். கொள்முதல் விவரங்கள், விற்பனை ரசீதுகள், வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். உரிமையாளர்கள் மற்றும் கடை ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நள்ளிரவு வரை சோதனை தொடர்ந்தது.