பாளை.யில் நாளை திமுக செயற்குழுக் கூட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 15) பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 15) பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்டச் செயலர் இரா.ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 15) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.  வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம்,  வாக்காளர் பட்டியல்,  ஈரோட்டில் இம்மாதம் 24,  25ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மண்டல மாநாடு,  உள்ளாட்சித் தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,  ஒன்றிய,  நகர,  பேரூர் நிர்வாகிகள் தவறாது பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com