ரூ.4.15 லட்சம் வரி நிலுவை: 18 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

தச்சநல்லூர் பகுதியில் ரூ. 4.15 லட்சம் கட்டண நிலுவை வைத்திருந்த 18 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

தச்சநல்லூர் பகுதியில் ரூ. 4.15 லட்சம் கட்டண நிலுவை வைத்திருந்த 18 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை நீண்ட காலமாக செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தச்சநல்லூர் மண்டலத்தில் முதல் வார்டு வாலாஜா பேட்டை தெரு, நடுத்தெருவில் 8 வீடுகளிலும், 5 ஆவது வார்டில் சிந்துபூந்துறை கீழத் தெரு, மேலத்தெருவில் 5 வீடுகளிலும், 10 ஆவது வார்டில் மூர்த்தி நாயனார் தெரு, கலிகாமநாயனார் தெருக்களில் 5 வீடுகள்  உள்பட 18 வீடுகளின் உரிமையாளர்கள் ரூ. 4.15 லட்சம் குடிநீர்க் கட்டணம் செலுத்தாமல் நிலுவை இருந்தது.
இதையடுத்து, மண்டல உதவி ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் உதவி வருவாய் அலுவலர் தங்கப்பாண்டியன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், அதிகாரிகள் மேற்கண்ட 18 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com