திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைபை சேவை அளிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
பி.எஸ்.என்.எல். நிறுவன பொதுமேலாளர் ப. முருகானந்தத்தை சந்தித்து டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. (திமுக) அளித்த மனுவில்: பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை போன்ற பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் இலவசமாக இணையதள இணைப்பை பெறும் வைபை (WIFI) வசதியை ஏற்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.