வைகாசி விசாகம்: 28ஆம் தேதி மதுபானக் கடைக்கு விடுமுறை

திருநெல்வேலி, குறுக்குத் துறை முருகன் கோயிலில் இம்மாதம் 28ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் கோயில் அருகேயுள்ள அரசு மதுபானக் கடைக்கு விடுமுறை

திருநெல்வேலி, குறுக்குத் துறை முருகன் கோயிலில் இம்மாதம் 28ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் கோயில் அருகேயுள்ள அரசு மதுபானக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
குறுக்குத் துறை முருகன் கோயிலில் திங்கள்கிழமை (மே 28) வைகாசி விசாகத் திருவிழா நடைபெறவுள்ளது. எனவே, இதையொட்டி அன்றைய தினம் கோயில் அருகேயுள்ள அரசு மதுபானக் கடை (எண்-10,912), அதனுடன் இணைந்த மதுக்கூடத்துக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் மேற்கண்ட கடையில் மது விற்பனை, மதுவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தைப் பதுக்கி வைத்தல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com