தென்காசி அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

தென்காசி அருகே மெலமெஞ்ஞானபுரத்தில் அரசுப் பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

தென்காசி அருகே மெலமெஞ்ஞானபுரத்தில் அரசுப் பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
வீ.கே.புதூரிலிருந்து பாவூர்சத்திரம் வழியாக தென்காசி நோக்கி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது. மடத்தூரை சேர்ந்த சீனிவாசன்(40) ஓட்டிவந்தார்.
தென்காசி-பாவூர்சத்திரம் சாலையில் மெலமெஞ்ஞானபுரம் பகுதியில் பேருந்து வந்தபோது, மர்மநபர்கள் கல்வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதுகுறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் சீனிவாசன் புகார் செய்தார். போலீஸார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com