தென்காசி அருகே மெலமெஞ்ஞானபுரத்தில் அரசுப் பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
வீ.கே.புதூரிலிருந்து பாவூர்சத்திரம் வழியாக தென்காசி நோக்கி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது. மடத்தூரை சேர்ந்த சீனிவாசன்(40) ஓட்டிவந்தார்.
தென்காசி-பாவூர்சத்திரம் சாலையில் மெலமெஞ்ஞானபுரம் பகுதியில் பேருந்து வந்தபோது, மர்மநபர்கள் கல்வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதுகுறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் சீனிவாசன் புகார் செய்தார். போலீஸார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.