நெல்லையப்பர் கோயில் திருப்பணிக்கு உதவியவர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு உதவியவர்களுக்கு அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் உபய நற்பணி மன்றம் சார்பில் பாராட்டு விழா நின்றசீர்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு உதவியவர்களுக்கு அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் உபய நற்பணி மன்றம் சார்பில் பாராட்டு விழா நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் நடைபெற்றது.
சாரதா கல்லூரி தாளாளர் சுவாமி பக்தானந்த மகாராஜ் தலைமை வகித்தார். இணை ஆணையர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார். உபய நற்பணி மன்றத்தைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன், செயல்அலுவலர் பா.ரோஷினி, சோனா வெங்கடாச்சலம், சி.டி.கே.சிதம்பரம் உள்ளிட்டோர் பேசினர். இந்தியா சிமென்ட்ஸ் துணைத்தலைவர் சண்முகம், டாக்டர் சிவராமகிருஷ்ணன், கும்பாபிஷேக சர்வசாதகம் செல்வம் பட்டர், பிச்சையா பட்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com