பாளை அருகே மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை

பாளையங்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகர் அருகேயுள்ள டி.வி.எஸ். நகர் 2 ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம் (82). அப்பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக பணி செய்து வருகிறார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (79). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
ஞானபிரகாசம் வெள்ளிக்கிழமை இரவு வேலைக்குச் சென்றுவிட்டார். கே.டி.சி. நகரில் வசித்து வரும் இவர்களது மகன் பால் பிரான்சிஸ், தனது தாய் அந்தோணியம்மாளிடம் பேசுவதற்காக செல்லிடப்பேசியில் அழைத்தாராம். அவர் செல்லிடப்பேசியை எடுக்கவில்லையாம். பின்னர் சனிக்கிழமை காலையில் வந்து பார்த்தபோது உடலில் ரத்தக் காயங்களுடன் அந்தோணியம்மாள் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்தோணியம்மாள் கழுத்து நெரிக்கப் பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, வீட்டில் இருந்த பொருள்கள் எதுவும் திருட்டுப் போகவில்லை.
குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com