விவேகானந்தர் மன்ற கலந்துரையாடல் கூட்டம்

பாளையங்கோட்டையில் விவேகானந்தர் மன்றத்தின் 185 ஆவது கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் விவேகானந்தர் மன்றத்தின் 185 ஆவது கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். அமைப்பின் செயலர் சுந்தரம் வரவேற்றார். பாஷ்யம் இறைவணக்கம் பாடினார்.
கூட்டத்தில், கவிஞர் அ. முருகன், விவேகானந்தரின் நற்பண்புகள், அகம், புறம் தூய்மைகள் குறித்து கவிதைகள் வாசித்தார். தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் அமைப்பின் நிறுவனர் சி. முத்துசாமி, பிரபா, இராஜகோபால், கோதை மாறன், பாபு, கிருஷ்ணன், குமார், இராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com