தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முத்து முகம்மது தலைமை வகித்தார். துணைத் தலைவர் க. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் கி. மீனாட்சிசுந்தரம், என். சங்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் ஓய்வூதியர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது. பணமதிப்பிழப்பு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி முடிவுகள் எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பிச்சையா நன்றி கூறினார்.