நெல்லை கம்பன் கழகத்தின் 460 ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். அ. முருகேசன் இறைவணக்கம் பாடினார். துணைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார்.
கம்பனில் தெய்வீகம் என்ற தலைப்பில் மருத்துவப் பேராசிரியர் ம. ஐயப்பனும், யுத்த காண்டம் என்ற தலைப்பில் கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். முனைவர் வெங்கடாசலபதி, பேச்சிமுத்து, சந்திரமோகன், வெ. குமரகுருபரன், கருடப்பன், சங்கரன், பேராச்சிமுத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.