வள்ளியூர் சூட்டுபொத்தையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது.
வள்ளியூர் சூட்டுபொத்தை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 105ஆவது குருபூஜை கிரிவலத் தேரோட்டத் திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி தினமும் காலை சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்று வருகின்றன. இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 18ஆம் தேதி கிரிவலத் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
திங்கள்கிழமை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை நடைபெற்றது. இரவு லலித கலா மந்தீர் மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. வியாழக்கிழமை (நவ. 22) சூட்டுபொத்தையின் மேல் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (நவ. 23) பெளர்ணமி கிரிவல வழிபாடு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு குருஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஸ்ரீமுத்துகிருஷ்ண மிஷன் நிர்வாகி மாதாஜி வித்தம்மா தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.