திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சிந்தாந்த நேர்முகப் பயிற்சி மையம் சார்பில் நேர்முகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்பில், சிவஞான சித்தியார் சுபக்கம் என்ற நூலுக்கு முனைவர் மீ.முருகலிங்கம் விளக்கம் அளித்தார். மாணவர் ஐயப்பன் குழுவினர் மாகேஸ்வர பூஜை நடத்தினர். பயிற்சி வகுப்பில் 80 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசுவாமி தலைமையில் முன்னாள் மாணவர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளிநாயகம், முருகேசன், கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அடுத்தப் பயிற்சி வகுப்பு அக். 14ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.