பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆச்சிமடம் விலக்கு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆச்சிமடம் விலக்கு பகுதியில் மோட்டார்சைக்கிளில் அடிபட்டு காயமடைந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க பெண் சாலையோரம் கிடப்பதாக சிவந்திப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று அப்பெண்ணை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.