3 மாவட்ட இஸ்லாமிய மாநாடு மேலப்பாளையத்தில் தொடக்கம்

மேலப்பாளையத்தில் அஹம்மதிய்யா முஸ்லிம் ஜமாத் அமைப்பின் சார்பில் இஸ்லாமிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.


மேலப்பாளையத்தில் அஹம்மதிய்யா முஸ்லிம் ஜமாத் அமைப்பின் சார்பில் இஸ்லாமிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
அஹம்மதிய்யா முஸ்லிம் ஜமாத் முதியோர் பிரிவு அணி சார்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்ட மாநாடு மேலப்பாளையத்தில் மஸ்ஜிது நாஸிர் பள்ளிவாசலில் 2 நாள்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை இம்மாநாட்டுக்கு அமைப்பின் தலைவர் ஏ.பி.ஒய். அப்துல்காதிர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஏ. பஷீர்அஹம்மது அறிக்கை வாசித்தார். மாநாட்டில், அமைப்பின் இந்திய தலைவர் மௌலானா ஜெய்னுதீன் சாகிப் ஹாமிது பங்கேற்றுப் பேசினார். அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.ஜெ. அக்பர்அலி, ஏ. முகைதீன்அலி உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில் தக்லீம் உள்பட பல்வேறு போட்டிகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், 3 மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தஹஜ்ஜூத் தொழுகை, காலை 6.30 மணிக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் 2 ஆம் அமர்வுக்கு ஒருங்கிணைப்பாளர் அக்பர்அலி தலைமை வகிக்கிறார். பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் இந்திய தலைவர், அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று பேசுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com