தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளைத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். செயலர் பொன்சேகர், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் சுவாமிநாதன், சத்துணவு ஊழியர்கள் சங்க வட்டக் கிளைத் தலைவர் அந்தோணி தமிழ்ச்செல்வன், அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச் செயலர் ஜெயபால் ஆகியோர் பேசினர். வட்டக் கிளை பொருளாளர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.