தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3ஆவது அலகில் புதன்கிழமை ஏற்பட்ட பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
மொத்தமுள்ள 5 அலகுகளில் முதல் மூன்று அலகுகள் 30 ஆண்டுகளை கடந்தது என்பதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
இந்நிலையில், 3ஆவது அலகில் உள்ள கொதிகலனில் புதன்கிழமை காலை ஏற்பட்ட பழுது காரணமாக அந்த அலகின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு பழுதை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.