உலக புத்தக தின விழா

கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில் உலக புத்தக தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில் உலக புத்தக தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் பேராசிரியர் ராசமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து, பள்ளி மாணவர், மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள் ஜான்கணேஷ், சிவானந்தம், வேலுச்சாமி, நூலகப் புரவலர் வினோபா, வாசகர் வட்ட துணைத் தலைவர் நடராஜன், தொழிலதிபர் பாபு, பசுமை இயக்கத்தைச் சேர்ந்த குமார், தமிழாசிரியர்கள் மதிவாணன், கெங்கம்மாள், நூலகப் பணியாளர்கள் கலைச்செல்வி, மல்லிகா, செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நூலகப் புரவலர் பிரபு வரவேற்றார். வட்டார நூலகர் பூல்பாண்டி நன்றி கூறினார்.


 வேம்பார் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா மற்றும் நூலக உறுப்பினர்கள் சேர்க்கை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு எழுத்தாளர் ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் தலைமை வகித்தார். நூலகர் பிரான்சிஸ் உமா முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ள வேம்பார் புனித பீற்றர் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர், மாணவிகள் 90 பேர் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர் அந்தோணி, நூலகப் பணியாளர்கள் ஆரோக்கிய செல்வி, லிங்க பிரியா மற்றும் நூலக உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் அரசு பொதுநூலகத்தில் உலக புத்தகக் கண்காட்சி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வாசகர் வட்ட துணைத் தலைவர் பகவதி பாண்டியன் தலைமை வகித்தார். நூலகர்கள் சோமசுந்தரி, ஜெ.ராஜதுரை, மோகன், முஜிபு, சிவனணைந்தபெருமாள், கீதா, ஆனந்தி, உமா மகேஸ்வரி, இசக்கியம்மாள், பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்குரைஞர் ஜே.எஸ்.டி.சாத்ராக் புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர், மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு கோல்டன் ரோட்டரி சங்கத் தலைவர் இரா.கோடீஸ்வரன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், சு.விஜயராகவன், ஊராட்சி முன்னாள் தலைவர் ராசி.பாலசுப்பிரமணியன், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் ஆர்.பொன்முத்து ஞானசேகர், ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளி தாளாளர் ச.ராமச்சந்திரன், வழக்குரைஞர் செ.சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்டார நூலகர் சு.மாதவன் வரவேற்றார். நூலகர் மேரி ஜூலியட் சுகுணா நன்றி கூறினார்.


ஆறுமுகனேரி அரசு கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி புத்தகக் கண்காட்சி, மாணவர், மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டி ஆகியன நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு பக்த ஜன சபைத் தலைவர் எம்.எஸ்.எஸ்.சண்முக வெங்கடேசன் தலைமை வகித்தார். நேரு காமராஜ் சோஷலிச இயக்கத் தலைவரும் ஓய்வு பெற்ற புள்ளியியல் துறை அதிகாரியுமான தூ.ராமஜெயம் முன்னிலை வகித்தார். இந்து சரஸ்வதி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் உதயசுந்தர், பத்மா, சொர்ணம், ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நூலகர் ச.சோமசுந்தரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com