கோவில்பட்டியில் அரசு மருத்துவர்கள் 2ஆவது நாளாக தர்னா

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவில்பட்டியில் 2ஆவது நாளாக மருத்துவர்கள் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்டச் செயலர் மோசஸ்பால் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி, காலை 7.30 மணிமுதல் 9.30 மணிவரை மட்டும் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com