தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுயநிதிப் பாடப்பிரிவுக்கான 4ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, காமராஜ் கல்லூரிச் செயலர் ஆ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரபாகர் கலந்துகொண்டு 136 மாணவர், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், அவர் பேசுகையில், பட்டப்படிப்பை முடிப்பவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பயிலுகின்றனர். காமராஜர் எடுத்துரைத்த கொள்கையான கல்வியே வாழ்க்கைத் தரம் உயர்வுக்கு வழி என்ற கோட்பாடு என்றும் வெற்றிக்கு வித்தாகும் என்றார்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் து. நாகராஜன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் ஏ.எம். டோனி மெல்வின், உடற்கல்வி இயக்குநர் பாலசிங் மற்றும் மாணவர், மாணவிகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.