சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகர் தோட்டத்தில் வாழைகள் வெட்டிச் சாய்ப்பு

சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகர் உள்ளிட்ட இருவரின் தோட்டங்களில் உள்ள வாழைகள் சனிக்கிழமை வெட்டிச் சாய்க்கப்பட்டன.

சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகர் உள்ளிட்ட இருவரின் தோட்டங்களில் உள்ள வாழைகள் சனிக்கிழமை வெட்டிச் சாய்க்கப்பட்டன.
சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் க. கணேசன் (41). ஒன்றிய அதிமுக அவைத் தலைவராவார். இவருக்கு செட்டிக்குளத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையோரம் தோட்டம் உள்ளது. இத் தோட்டத்தில் தென்னை மற்றும் வாழைகள் பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை காலையில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்துக்குச் சென்றாராம். அப்போது 100க்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் உர முட்டைகள், மின் வயர்கள் வெட்டி சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோல் அருகில் செட்டிக்குளம் வெட்டுப்பெருமாள் என்பவரது தோட்டத்தில் இருந்த வாழைகள் மற்றும் மோட்டார் அறையில் உள்ள பொருள்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தனவாம். இதையடுத்து இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில் புளியங்குளத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் செட்டிக்குளத்தில் உள்ள தோட்டத்தில் வாழை மற்றும் பொருள்களைச் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதுபற்றி போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com