ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் அந்தோணி பெனடிக் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 50 மனுக்கள் பெறப்பட்டன.