தூத்துக்குடி மறவன்மடம் அமிர்தா வித்யாலய பள்ளியில் தமிழ் மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவைத் தொடங்கிவைத்தார்.
தமிழ் மாணவர் மன்றத் தலைவராக எ. மதன்ராஜ், துணைத் தலைவராக கெள. கீர்த்தி, செயலராக இளங்கோ ஜெயராம், துணைச் செயலராக குருதிவ்யதர்ஷினி, பொருளாளராக நியாமஸ்ரீ கிருஷ்ணம்மாள், துணைப் பொருளாளராக நாகராஜன் மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் தமிழ் மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் வித்யாசங்கர், தமிழ்த் துறைத் தலைவர் சிவசங்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.