மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டுத் தற்கொலை

கோவில்பட்டியில் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட டிவி மெக்கானிக் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கோவில்பட்டியில் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட டிவி மெக்கானிக் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை எம்.கே.டி. நகரைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் சார்லஸ் டார்வின்(37). டிவி மெக்கானிக் தொழில் செய்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாகவே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தாராம். அதற்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த அவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு மனைவி வரலட்சுமி என்ற வரதம்மாள், மகன் பாரதிபிரியன்(8) ஆகியோர் உள்ளனர். தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com