தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாதெமியில் தமிழ்வழி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை அகாதெமியின் நிறுவனர் பேச்சிமுத்து தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி கூட்டுறவு சார் பதிவாளர் மு. முத்துசாமி குத்துவிளக்கேற்றி வகுப்பை தொடங்கிவைத்துப் பேசினார். நிகழ்ச்சியில், கூட்டுறவு சார்பதிவாளர் இளமாறன், அகாதெமி தாளாளர் பி. சகானா தர்ஷினி, பயிற்சி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ராஜ்குமார், இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.