கோவில்பட்டியில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணன் ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் முன்பிருந்து புறப்பட்ட இந்த ரத யாத்திரைக்கு பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். கெளடியமடம் ஸ்ரீவை சதாசிவதாஸ்பிரபு ஆன்மிக உரை நிகழ்த்தினார்.
ரத யாத்திரையானது நடராஜபுரம், மார்க்கெட் சாலை, புதுரோடு, கூசாலிபட்டி, லாயல் மில் காலனி, பழனி ஆண்டவர் கோயில் தெரு, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை சாலை, ராஜீவ்நகர், காமராஜ்நகர், கதிர்வேல்நகர், மந்தித்தோப்பு, நரிக்குறவர் காலனி, மேலப்பாண்டவர்மங்கலம், கீழப்பாண்டவர்மங்கலம், வடக்கு மற்றும் தெற்கு வண்டானம், கடம்பூர், கோடாங்கால், ஓனமாகுளம், இளவேளங்கால், பருவில்லிக்கோட்டை, ஐரவன்பட்டி, தென்னம்பட்டி, கொத்தாலி, கொல்லங்கிணறு வழியாக அய்யப்பபுரம் ஸ்ரீஅனுமன் தியான பீடத்திற்கு சென்றடைகிறது.
இந்த ரத யாத்திரையில் சேவா பாரதி மாநில இணை அமைப்புச் செயலர்கள் முனியசாமி, ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் காளிராஜ், பாஜக நகரத் தலைவர் வேல்ராஜா, ஒன்றியத் தலைவர் ராம்கி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.