தென்திருப்பேரை அருகே மாடுகளை அரிவாளால் வெட்டியதாக இருவர் கைது

தென்திருப்பேரை  அருகே வயலிலில் மேய்ந்த 11 மாடுகளை  அரிவாளால் வெட்டிய 2 பேரை  ஆழ்வார்திருநகரி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தென்திருப்பேரை  அருகே வயலிலில் மேய்ந்த 11 மாடுகளை  அரிவாளால் வெட்டிய 2 பேரை  ஆழ்வார்திருநகரி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 சிவலிலிங்கப்புரம் என்ற குட்டகரை பகுதியைச் சேர்ந்த கல்லுக்காரன் மகன்கள்  பால்ராஜ்  மற்றும் மாரிமுத்து  என்ற ரெங்கன். விவசாயிகளான  இவர்கள்  இருவரும் தங்களது வயலிலில் நெல் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், தென்திருப்பேரை அருகே  உள்ள மேலக்கடம்பா பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் சாக்ரடிஸ் (60)  வளர்த்து வரும் 10-க்கும் மேற்பட்டமாடுகள் பால்ராஜ் மற்றும் மாரிமுத்து  என்ற ரெங்கன் வயலிலில் புகுந்து நெற்பயிரை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால்  இருவரும்  மாடுகளை அரிவாளால் சரமாரியாக  வெட்டியுள்ளனர்.  இதில் 11 மாடுகள் பலத்த காயம்  அடைந்தன.  இது குறித்து  ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் சாக்ரடிஸ்  அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பால்ராஜ் மற்றும் மாரிமுத்து  என்ற ரெங்கன்  ஆகிய  இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com