தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி தென்திருப்பேரை ஸ்ரீமகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலில் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டு இக்கோயிலில் பக்தர்கள் மற்றும் தென்திருப்பேரை ஊர்ப்பொதுமக்கள் சார்பில், தமிழகத்தில் நன்கு பெய்து வறட்சி நீங்கி, பசுமை வளம் செழிக்க வேண்டியும் முதன்முறையாக ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.