தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞர் கைது

கோவில்பட்டி புதுரோட்டில் நின்று கொண்டிருந்த தொழிலாளியை கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கோவில்பட்டி புதுரோட்டில் நின்று கொண்டிருந்த தொழிலாளியை கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டியையடுத்த சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராமையா மகன் கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணியன்(43). இவர், கோவில்பட்டி புதுரோட்டில் தனியார் மருத்துவமனை அருகேயுள்ள தேநீர் விடுதியில் டீ குடித்துவிட்டு, தனது பைக்கில் புறப்பட்டாராம்.  அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தன்னை மார்க்கெட் அருகே கொண்டுவிடுமாறு கூறினாராம்.  இவர் மறுத்ததையடுத்து, அவதூறாகப் பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து  வடக்குத் திட்டங்குளம் மறவர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் நாகராஜை (25) கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com