ஆத்தூர் அருகே சொக்கப்பழக்கரை கிராமத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சியதாக 19 மோட்டார்களை சனிக்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் ஆத்தூர் அருகே சொக்கப்பழக்கரை கிராமத்தில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக மோட்டார்கள் முலம் உறிஞ்சி விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்குத் தகவல் வந்ததையடுத்துவருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினரும் சோதனை மேற்கொண்டனர்.
இதில், நிலத்தடி நீர் எடுக்க பயன்பட்ட 19 டீசல் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.