தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்திற்கு நடந்து சென்ற பக்தர் மீது பைக் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் சுரேஷ்விக்டர்(27). இவர் மற்றும் இவரது உறவினர்கள் காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்களாம்.
சால்நாயக்கன்பட்டி, - குருவிநத்தம் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்த சுரேஷ்விக்டர் மீது பைக் மோதியதில் சுரேஷ்விக்டர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்கை ஓட்டி வந்த தருவைகுளத்தைச் சேர்ந்த ஜீசஸ்அஸ்வின்(22) மற்றும் அவரது பின்னால் அமர்ந்திருந்த மைக்கேல்சதீஷ்குமார்(18) ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பசுவந்தனை போலீஸார் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பசுவந்தனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.