தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி விளாத்திகுளம் கவியரசு அண்ணாமலை ரெட்டியார் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து சுழற்கோப்பையை பரிசாகப் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் தயாகர் ஆகியோரை பள்ளித் தாளாளர் லட்சுமணப்பெருமாள், முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.