தமிழ்நாடு வனத் துறை சார்பில் மரப்பயிர் வளர்த்தோருக்கான விருது பெற்ற ரோட்டரி சங்க உறுப்பினர் ராமமூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டத் தலைவர் விநாயகா ஜி.ரமேஷ், தொழிலதிபர்கள் ரத்தன் டாகா, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வனத் துறை சார்பில் 2016-17ஆம் ஆண்டிற்கான மரப்பயிர் வளர்த்தோருக்கான விருது பெற்ற ரோட்டரி சங்க உறுப்பினர் எஸ்.ராமமூர்த்தியைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ஷேக்சலீம், மாவட்ட துணை ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, முன்னாள் துணை ஆளுநர் சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் தன்ராஜ்ராஜா, நாராயணசாமி, பரமேஸ்வரன், வீராச்சாமி, லட்சுமணப்பெருமாள், செளந்தர்ராஜன் உள்பட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.