திருச்செந்தூரில் இருசக்கர வாகனத்தை திருடியதாக போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் பாரதியார் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சுப்பராயலு (28). இவர் வடக்குரதவீதியில் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 30-ஆம் தேதி இவரது வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர போது, திருடி போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் புதன்கிழமையன்று மாலை திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரம் ரயில்வே பாதை அருகே காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தார். அவரை மடக்கிப்பிடித்து விசாரித்ததில், நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வேதகோயில்தெருவைச் சேர்ந்த அரிகிருஷ;ணன் மகன் ராஜேஷ் (28) என்பதும், அவர் தான் சுப்பராயலுவின் இருசக்கரவாகனத்தை திருடியவர் என்பதும் தெரியவந்நது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.